ADDED : செப் 09, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், மதுரை ஸ்டாரெட்ஸ் கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.
இணைவேந்தர் அறிவழகி, துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். இதன் மூலம் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
ஏற்பாடுகளை மாணவர் நலத்துறை இயக்குனர் சாம்சங் நேசராஜ், துணை இயக்குனர் கபிலன், ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் செய்தனர்.