sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

--திறந்து ஒரு மாதம் கடந்தும் வசதியின்றி அவதியில் பயணிகள்--

/

--திறந்து ஒரு மாதம் கடந்தும் வசதியின்றி அவதியில் பயணிகள்--

--திறந்து ஒரு மாதம் கடந்தும் வசதியின்றி அவதியில் பயணிகள்--

--திறந்து ஒரு மாதம் கடந்தும் வசதியின்றி அவதியில் பயணிகள்--


ADDED : ஜூலை 05, 2025 02:53 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ.3 கோடி 40 லட்சம் செலவில் புதுப்பித்து திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்தும் குடிநீர், பாலூட்டு அறை, போலீஸ் பீட், நேர அட்டவணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை இடித்து ரூ.3.40 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு கடந்து மே 29ல் திறப்பு விழா நடந்தது. இதில் வணிக கடைகள், இரண்டு ஹோட்டல்கள், பயணிகள் காத்திருப்பு அறை, புறக்காவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் மூலம் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் இரவு நேரங்களிலும் கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பிற்கு போலீஸ், பஸ் வந்து செல்லும் நேர அட்டவணை என எந்தவித அடிப்படை வசதிகளும் தற்போது வரை செய்யப்படாததால் பயணிகள், பஸ் டிரைவர்கள் அலை கழிப்பிற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் தெரிவிக்கையில், முழு வசதி ஏற்படுத்திய பின்னர் திறந்து இருக்கலாம். கழிப்பறையை காலை 6:00 மணிக்கு திறந்து இரவு 8:30க்கு மூடி விடுகின்றனர். 24 மணி நேரமும் வெகுதுார பஸ்கள் பயணிகளை இறக்கி செல்கையில் திறந்த வெளியாக உபயோகிக்க வேண்டியுள்ளது. பெண்கள், மாணவிகள் நிலை சிரமம். போதையில் விழுந்து கிடக்கும் குடிமகன்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மின் வசதி இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு அறையும் பூட்டப்பட்டுள்ளது.

பயண நேர அட்டவணை, பஸ் நிறுத்தத்திற்கான இடங்கள் எழுதவில்லை என குறைகள் தொடர்கிறது. முழுமை பெறாத பஸ் ஸ்டாண்டுக்கு ஆர்.டி.ஓ எவ்வாறு அனுமதி கொடுத்தார் என்பதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us