ADDED : ஜூன் 03, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் நேற்று அடித்த பலத்த காற்றினால் மின்தடை ஏற்பட்டு மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
சத்திரப்பட்டி வடக்கு தெரு செல்வ முளை மாரியம்மன் கோயில் எதிரே நேற்று மாலை அடித்த பலத்த காற்றினால் பழமையான மரங்கள் ரோட்டில் சரிந்து பகுதியில் உள்ள மரங்களின் மேல் விழுந்தது. மின்கம்பமும் சரிந்தது.
சூறாவளி காற்றுடன் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிகாரிகளிடம் தகவல் அளித்தும் முறையான நடவடிக்கை இல்லை.

