sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் உடை கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

/

சாத்துாரில் உடை கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

சாத்துாரில் உடை கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

சாத்துாரில் உடை கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்


ADDED : மே 23, 2024 02:43 AM

Google News

ADDED : மே 23, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துாரில் உடைகல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம் உள்ளது.

தாயில்பட்டி, வெம்பக்கோட்டை பகுதிக்கு சாத்துார் வழியாக டாரஸ் லாரிகளில் அதிகளவில் கட்டுமான பணிக்கான உடைகற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த உடை கல் ஏற்றி வரும் லாரிகளின் பாடிஉயரத்திற்கும் மேலாக கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.

சாத்துார் தாயில்பட்டி ரோட்டில் 3 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. உடை கற்களை அதிக உயரத்திற்கு ஏற்றி வரும் லாரிகள் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கற்கள் குலுங்கி ரோட்டில் விழும் நிலை உள்ளது.

பெரிய அளவிலான உடை கல் லாரியில் இருந்து தவறி ரோட்டில் விழுந்தால் பின்னால் வரும் வாகனம் விபத்திற்குள்ளாகும். அல்லது ரோட்டில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் அதிக உயரத்தில் உடை கல் ஏற்றி வரும் லாரிகளை எச்சரிக்காமல் கண்டும் காணாமல் உள்ளனர். உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பாக போலீசார் அதிக உயரத்தில் உடை கல் ஏற்றி வரும் லாரிகளை எச்சரித்து விபத்து நேரிடும் முன் தடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us