நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு, உதவிப்பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான முதல்வரின் தமிழ் திறனாய்வுத் தேர்வு நேற்று நடந்தது. இதற்காக அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாப்பட்டி, சாத்துார், சிவகாசி, திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் என மொத்தம் 8 மையங்கள் ஒதுக்கப்பட்டது.
இந்த தேர்வில் பங்கேற்க 2330 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் காலையில் நடந்த முதல் தாள் தேர்வில் 2034 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 296 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் 2028 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 302 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.