ADDED : ஏப் 06, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீ வித்யா கலை, அறிவியல் கல்லுாரியில் மாவட்ட தோட்டக்கலைத் துறை, கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் நுாறு சதவிகிதம் ஓட்டுப்பதிவு குறித்து முதல் முறை ஓட்டு போடும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
கலெக்டர் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் விஜயா, கல்லுாரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் பசுபதி, தோட்டக்கலை உதவி இயக்குநர் கலைவாணி உள்பட அதிகாரிகள், பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

