ADDED : மே 02, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட அணிகள், சிவப்பு நாடா குழு, செஞ்சிலுவை சங்கம், எஸ்.பி.ஜே., மருத்துவமனை சார்பில் ரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். நாட்டு நலப்படி திட்ட அலுவலர் ராஜு காந்தி வரவேற்றார். டாக்டர் சண்முகராஜ் பேசினார். மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மாரீஸ்வரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தேவி, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், சிவப்பு நாடா குழு ஒருங்கிணைப்பாளர் தீபா செய்தனர்.

