sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

லஞ்சம்: தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், டிரைவர் கைது

/

லஞ்சம்: தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், டிரைவர் கைது

லஞ்சம்: தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், டிரைவர் கைது

லஞ்சம்: தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், டிரைவர் கைது


ADDED : மே 07, 2024 10:26 PM

Google News

ADDED : மே 07, 2024 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் அக்ரஹாரம் தெருவில் உள்ள மருந்துக் கடை உரிமையாளரிடம் 75,000 ரூபாய் லஞ்சம் பெற முயன்ற தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் தயாநிதி, 54. விருதுநகர் அக்ரஹாரம் தெருவில் மருந்துக் கடை நடத்தும் ஆனந்தராஜ், 49, என்பவரிடம் விதிமுறை மீறல் வழக்குகளை முடித்து தருவதற்காக, 75,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆனந்தராஜ் புகார் செய்தார். போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை ஆனந்தராஜிடம் கொடுத்து அனுப்பினர். அந்தப் பணத்தை தயாநிதியின் டிரைவர் மணிவண்ணன் அக்ரஹாரம் தெருவில் உள்ள மருந்துக் கடையில் வைத்து வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் காரில் மறைந்திருந்த தயாநிதியையும் கைது செய்தனர்.

இருவரிடமும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us