ADDED : ஆக 23, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் எக்ஸ்பிகா 24 என்ற தலைப்பில் கண்காட்சி நடந்தது.
இதில் கல்லுாரிச் செயலாளர் சர்ப்பராஜன், கல்லுாரி முதல்வர் சாரதி, துறைத் தலைவர் ராஜ்குமார், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இங்கு 174 மாணவர்கள் கணினி பயன்பாட்டினை விளக்கும் 79 விதமான வடிவமைப்புகளை காட்சிப்படுத்தினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்தனர். துறைப் பேராசிரியர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.