நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி நிர்வாக குழு தலைவர் ஸ்ரீரெங்கராஜா, தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தனர். முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகரன், மழலை மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்கள் வழங்கி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.

