/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர் விதிமீறலால் அதிகரிக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கள்: இருப்பு வைக்கப்படும் மணி மருந்து
/
தொடர் விதிமீறலால் அதிகரிக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கள்: இருப்பு வைக்கப்படும் மணி மருந்து
தொடர் விதிமீறலால் அதிகரிக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கள்: இருப்பு வைக்கப்படும் மணி மருந்து
தொடர் விதிமீறலால் அதிகரிக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கள்: இருப்பு வைக்கப்படும் மணி மருந்து
ADDED : மே 12, 2024 12:50 AM
சிவகாசி:பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடுவதால் ஏற்படும் வெடிவிபத்து ஒருபுறம், பட்டாசு ஆலைகளில் மணி மருந்து இருப்பு வைக்கப்பட்டு விதி மீறுவதால் தொடரும் வெடி விபத்துக்கள் மறுபுறம் என விருதுநகர் மாவட்டம் அதிர்ச்சியில் உள்ளது. இதில் உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இம்மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்துார் பகுதியில் நாக்பூர் டி.ஆர்.ஓ., சென்னை உரிமம் பெற்ற 1074 பட்டாசு ஆலைகள் உள்ளன.
காற்றில் பறக்கும் விதி
ஆலைகளை குத்தகைக்கு விடுவதால் விதிகள் மீறப்பட்டு வெடி விபத்து ஏற்படுவது ஒரு பக்கம் இருக்க, ஆலைகளில் மணி மருந்து இருப்பு வைப்பதால் தொடர்ந்து வெடி விபத்து ஏற்படுகிறது.
பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மருந்து கலவைகளை அன்றே காலி செய்யப்பட வேண்டும். இருப்பு வைக்க கூடாது. மறுநாள் பட்டாசு உற்பத்தி பணி துவங்கும் போது புதிய மருந்துகள் கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த விதி காற்றில் பறக்க விடப்பட்டு பெரும்பாலான ஆலைகளில் மணி மருந்து இருப்பு வைக்கப்படுகிறது.
அவற்றில் வேதியியல் மாற்றத்தினால் நீர்த்து வெடி விபத்து ஏற்படுவது தொடர்கிறது. அந்த மருந்தில் பல்லி, எலி போன்றவை நடமாடும் போது உராய்வு ஏற்பட்டு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டதும் உண்டு.
ஐந்து மாதங்களுக்கு முன் சிவகாசி ஏழாயிரம் பண்ணை அருகே பட்டாசு ஆலையில் மணி மருந்து இருப்பு வைக்கப்பட்ட அறையை திறந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். கடந்த காலங்களில் நாரணாபுரம் புதுார், செங்கமலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பட்டாசு ஆலைகளில் முதல் நாள் இருப்பு வைக்கப்பட்டிருந்த மணி மருந்து வைக்கப்பட்டிருந்த அறையை திறக்கும் போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் மணி மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆலைகளில் மூலப் பொருட்களான மருந்து கலவைகளை அன்றே காலி செய்யப்பட வேண்டும். இருப்பு வைக்கக் கூடாது. மருந்து கலவை இருப்பு குறித்து அதிகாரிகள், ஆலை உரிமையாளர்கள் கவனம் செலுத்தி, உயிர் பலியை தடுக்க வேண்டும். இது ஆய்வு செய்யப்படுவதும் அவசியம்.