
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிமையாளர் சார்பில் ரூ.10 லட்சம், அரசு சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி விருதுநகர் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் சாட்சியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் தேவா முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு மற்றும் சி.பி.எம் நிர்வாகிகள், பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

