ADDED : மே 30, 2024 03:00 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பாக ஊழியர்களின் ஒப்புதல், கால அவகாசம் வழங்காமல் முன் வருமான வரி பிடித்தம் செய்யும் கருவூலத்துறை கமிஷனரை கண்டித்து கிளைத்தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கிளை செயலாளர் முனியாண்டி, மாவட்டச் செயலாளர் வைரவன், முன்னாள் மாநிலத் துணைத்தலைவர் சாய்கண்ணன், ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
