
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் அருகே ஆர்.ஆர்.,நகரில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச் முன்பு தலித் கிறிஸ்தவர்களை மீண்டும் எஸ்.சி., பட்டியலில் சேர்க்க கோரி மதுரை பாதிரியார் ஜெரோம் எரோணிமுஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பாதிரியார்கள் அருள் ராயன், சந்தியாகப்பன், வி.சி.க., துணைச் செயலாளர் ஆற்றல் முரசு, உள்பட பாதிரியார்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாதிரியார் பீட்டர் ராய் செய்தார். மாணிக்கராஜ் நன்றி கூறினார்.

