ADDED : மே 18, 2024 01:35 AM
அ நிறம் | அளவு
நரிக்குடி:சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை, வழியாக நேற்று காலை 6:20 மணிக்கு நரிக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தது. அப்போது படியில் உட்கார்ந்து வந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் தவறி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி உடல் துண்டு துண்டாகி பலியானார்.
இறந்தவர் தென்காசி சுரண்டையைச் சேர்ந்த நுங்கு வியாபாரி மரியம் மில்கி 24 என போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
