ADDED : மே 17, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்,64, இவர் மினி லாரி டிரைவர்.
நேற்றுமுன்தினம் காலை 6:00 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே உடையநாதபுரம்விலக்கு ஓரத்தில் லாரியை நிறுத்தி, டயர்களை சோதனை செய்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரி லட்சுமணன் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார்.
பந்தல்குடி போலீசார் டாரஸ் லாரி டிரைவர் சேலம் மாவட்டம் ஓமலூர்மல்லிகோட்டையைச் சேர்ந்த குமாரை 45, கைது செய்து விசாரிக்கின்றனர்.

