ADDED : மார் 24, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இதில் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய உடனடி பணிகள், ஓட்டுச்சாவடி பணிகள், வாக்காளர் விழிப்புணர்வு பணிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் கையாளுதல், ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

