/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
13ம் நுாற்றாண்டு சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
/
13ம் நுாற்றாண்டு சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
13ம் நுாற்றாண்டு சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
13ம் நுாற்றாண்டு சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
ADDED : செப் 10, 2024 04:55 AM

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருச்சுழி சரக அலுவலக நிர்வாகத்தில் உள்ள சிவகாமி அம்மன் சமேத அம்பலவாண சுவாமி கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
அப்போதைய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கோயிலின் முன் மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் ராவணன் மனைவி மண்டோதரி தன்னுடைய திருமணத் தடை நீங்குவதற்காக தாமரைகள் நிறைந்த குளத்தை கொண்ட, இந்த சிவனைத் தரிசித்ததால் அவருடைய திருமணம் சிறப்பாக நடைபெற்ற இடம்.
மிகவும் பழமை வாய்ந்த தளமாக விளங்கும் அம்பலவாணர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடத்தி பல நூற்றாண்டுகள் ஆகி விட்டது. கட்டடங்களும் சேதமடைந்து வருகின்றன. புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

