நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பெனியேல், எஸ்.பி.எம்., டிரஸ்ட், தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. ட்ரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
பாஸ்டர் ஜேசுதாஸ் முன்னிலை வகித்தார். பாஸ்டர் ஜோஸ்வா கண்ணன் வரவேற்றார். கண் மருத்துவமனை டாக்டர் தினேஷ் தலைமையில், மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.