sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அர்ஜூனா நதியின் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களால் பாதிப்பு அகற்ற எதிர்பார்க்கும் விவசாயிகள்

/

அர்ஜூனா நதியின் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களால் பாதிப்பு அகற்ற எதிர்பார்க்கும் விவசாயிகள்

அர்ஜூனா நதியின் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களால் பாதிப்பு அகற்ற எதிர்பார்க்கும் விவசாயிகள்

அர்ஜூனா நதியின் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களால் பாதிப்பு அகற்ற எதிர்பார்க்கும் விவசாயிகள்


ADDED : ஆக 26, 2024 05:49 AM

Google News

ADDED : ஆக 26, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:

சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணையில் இருந்து வடமலாபுரம் பகுதி வழியாக செல்லும் அர்ஜூனா நதியில் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்துள்ளதால் மழை பெய்தும் பயனில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி அருகே காளையார்குறிச்சி, எம்.புதுப்பட்டி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியாக அர்ஜூனா நதி செல்கிறது. இதனை நம்பி 2000 ஏக்கரில் சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஆனால் நதி முழுவதுமே சீமை கருவேல மரங்கள், கோரைப் புற்கள் அதிகளவில் இடைவெளியின்றி ஆக்கிரமித்துள்ளது.

மழை பெய்தால் அர்ஜுனா நதி வழியாக ஆணைக்குட்டம் அணைக்கு தண்ணீர் வரும். மேலும் இங்கிருந்து அர்ஜுனா நதி வடமலாபுரம் வழியாக கோலார்பட்டி அணை, இருக்கன்குடி அணைக்கு செல்கின்றது. இதனை நம்பி இப்பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள அர்ஜுனா நதி முழுவதுமே சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளது.

இதனால் மழை பெய்தும் தண்ணீர் ஓடிச் செல்ல வழி இல்லை. தவிர போர்வேல் அமைத்து விவசாயம் செய்யவும் வழியில்லை. எனவே அர்ஜூனா நதியை துார்வாரி, சீமைக் கருவேல மரங்கள், கோரைப் புற்களை அகற்ற வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us