ADDED : செப் 16, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் 42. இவருக்கு சிவகாசி கவிதா நகரில் பட்டாசுக்கான குழாய் தயாரிக்கும் கடை உள்ளது. இங்கு முதல் நாள் இரவு கடையை பூட்டும் போது சுவாமி கும்பிடுவதற்காக விளக்கு ஏற்றிவிட்டு அணைக்காமல் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு எதிர்பாராதவிதமாக இதனால் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.