/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சீட் திட்டத்தில் பயன்பெற அழைப்பு
/
சீட் திட்டத்தில் பயன்பெற அழைப்பு
ADDED : ஆக 05, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சீட் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்விக்கான அதிகாரமளிக்க போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற நல்ல தரமான பயிற்சி அளித்தல், சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல், வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், வீட்டுமனைப்பட்டா, வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல் ஆகியவை செய்யப்படுகிறது.
தகுதியுள்ள பயனாளிகள் www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.