/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காதலன் தற்கொலையால் காதலியும் தற்கொலை
/
காதலன் தற்கொலையால் காதலியும் தற்கொலை
ADDED : ஆக 06, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேலப்பாளையம் தெருவை சேர்ந்தவர் தாமரைப்பாண்டி, 22, இவர் அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரி, 21, என்ற பெண்ணை காதலித்துள்ளார்.
இதனை தாமரைப்பாண்டி பெற்றோர் கண்டித்த நிலையில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் விரக்தி அடைந்து மிகுந்த மன வேதனையில் இருந்த காயத்ரி, நேற்று முன்தினம் தனது வீட்டு சமையல் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வத்திராயிருப்பு போலீசார் விசாரித்தனர்.