ADDED : மே 07, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி முத்துசாமிபுரம் தெருவை சேர்ந்தவர் விஜய் 26.
பெயின்டரான இவர் நேற்று முன்தினம் அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்காக மரச்சாரத்தின் மீது ஏறி பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.