sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குடியிருப்புகளுக்கு மத்தியில் கல்கிடங்கில் தேங்கியுள்ள கழிவு நீர் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள்

/

குடியிருப்புகளுக்கு மத்தியில் கல்கிடங்கில் தேங்கியுள்ள கழிவு நீர் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள்

குடியிருப்புகளுக்கு மத்தியில் கல்கிடங்கில் தேங்கியுள்ள கழிவு நீர் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள்

குடியிருப்புகளுக்கு மத்தியில் கல்கிடங்கில் தேங்கியுள்ள கழிவு நீர் தொற்றுநோய் பாதிப்பில் மக்கள்


ADDED : மே 21, 2024 07:17 AM

Google News

ADDED : மே 21, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : திருத்தங்கல்நெற்குத்தி பாறை பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கல் கிடங்கில் தேங்கியுள்ள கழிவு நீரால் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்படுகின்றனர்.

திருத்தங்கல் நெற்குத்தி பாறை பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கல் கிடங்கு உள்ளது. மழை பெய்து கல் கிடங்கு நிரம்பிய நிலையில் நகரின் ஒட்டுமொத்த கழிவுகளும் இதில்தான் கலக்கின்றது. கல் கிடங்கு முழுவதுமே பாசி படர்ந்து காணப்படுகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கல்கிடங்கிலிருந்து கழிவு நீர் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றது. இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தால் இப்பகுதியில் குடியிருக்கவே முடியவில்லை என மக்கள் புலம்புகின்றனர்.

கொசு உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். மேலும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடுகின்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பகுதியைச் சேர்ந்த 50 க்கும்மேற்பட்டோர் பல்வேறு தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தினமும் மருத்துவமனைக்கு அலைகின்றனர். எனவே கல் கிடங்கினை முழுமையாக மூட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சின்னத்தம்பி, குடியிருப்புவாசி, மழைக்காலம் மட்டுமல்லாது எப்போதுமே கல்கிடங்கில் கழிவு நீர் தேங்கியுள்ளது. சிறிய மழை பெய்தாலும் கழிவு நீர் வெளியேறி வீட்டிற்குள் புகுந்து விடுகின்றது. குடியிருப்புகளின் வாசலை ஒட்டியுள்ள இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தினால் வசிக்க முடியவில்லை. சமீபத்தில் மட்டும் தெரு முழுவதும் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றோம். தவிர கொசு தொல்லையால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கல் கிடங்கினை உடனடியாக மூட வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us