sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : செப் 03, 2024 04:36 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலரில் பட்டாசு திரி கடத்தியவர் கைது

விருதுநகர்: ஓண்டிப்புலிநாயக்கனுாரைச் சேர்ந்தவர் சசிக்குமார் 43. இவர் டூவீலரில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 200 குரோஸ் வெள்ளை திரிகளை எடுத்துச் சென்றதை ஆமத்துார் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து கைது செய்தனர்.

* சிவகாசி: சிவகாசி நமஸ்கரித்தான் பட்டி வடக்கூர் காலனியைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் 38. இவர் தனது டூவீலரில் அரசு அனுமதி, ரசீது இன்றி பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை கொண்டு சென்றார். எம்.புதுப்பட்டி போலீசார் பட்டாசு, டூவீலரை பறிமுதல் செய்தனர்.-

மணல் திருடிய இருவர் கைது

சிவகாசி: சிவகாசி அருகே இடையன் குளம் கண்மாயில் வெம்பக்கோட்டை பி.திருவேங்கிடபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து 36, மாடசாமி ஆகியோர் மணல் அள்ளும் இயந்திரங்களை வைத்து திருட்டுத்தனமாக மணல் அள்ளினர். இருவரையும் மாரனேரி போலீசார் கைது செய்து, டிராக்டர், இரு மணல் அள்ளும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us