sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரேஷன் கடை விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம்

/

ரேஷன் கடை விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம்

ரேஷன் கடை விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம்

ரேஷன் கடை விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம்


ADDED : மார் 04, 2025 06:43 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி:' திருச்சுழி திருமேனிநாதர் கோயில் அருகில், ரேஷன் கடைகள் விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருச்சுழி கிடங்கில் இருந்து அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் தரமற்ற நிலையிலும் எடை குறைவாகவும் வழங்கப்படுவதை கண்டித்தும் அதிகாரிகள் ரேஷன் கடை பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ததை கண்டித்தும் விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து, தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்திவடிவேல், செயலாளர் ராமு, பொருளாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால், காரியாபட்டி பகுதியில் 70 ரேஷன் கடைகளும், திருச்சுழி பகுதியில் 96 ரேஷன் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து, சங்க மாவட்ட தலைவர் செந்திவடிவேல் : திருச்சுழி கிடங்கில் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் தரமற்றும், எடை குறைவாகவும் வழங்கப்படுகிறது. மண்டல இணைப்பதிவாளர், கூட்டுறவு துறை அதிகாரிகள், மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எதுவும் எடுப்பது இல்லை. கிடங்கை ஆய்வு செய்ய வருவதும் இல்லை.

ஆனால் கடை நிலை ஊழியர்களான ரேஷன் கடை விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வது எந்த வகையில் நியாயம். கிடங்கை ஆய்வு செய்ய மாவட்ட அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன்.

திருச்சுழி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாபுரம் மற்றும் இலுப்பையூர் ரேஷன் கடை விற்பனையாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டிக்கிறோம். மார்ச் 3 முதல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.






      Dinamalar
      Follow us