/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் பழுதடைந்த மோட்டார் சரிசெய்து குடிநீர் வினியோகம்
/
திருத்தங்கலில் பழுதடைந்த மோட்டார் சரிசெய்து குடிநீர் வினியோகம்
திருத்தங்கலில் பழுதடைந்த மோட்டார் சரிசெய்து குடிநீர் வினியோகம்
திருத்தங்கலில் பழுதடைந்த மோட்டார் சரிசெய்து குடிநீர் வினியோகம்
ADDED : ஆக 29, 2024 04:42 AM
சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருத்தங்கலில் நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மோட்டார் சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகில் மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இங்கு சேகரிக்கப்பட்டு நகரில் பல்வேறு இடங்களில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டிகளுக்கு ஏற்றப்படும்.
அதன்படிநீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் வந்து விடுகின்றது. ஆனால் இங்கு ஒன்றரை மாதங்களாக மோட்டார் பழுதால் குடிநீர் மற்ற தொட்டிகளுக்கு ஏற்ற முடியவில்லை. இதனால் நகரில் பெரும்பான்மையான பகுதிகளுக்கு 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. மக்கள் குடிநீரை மீண்டும் விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்தினர்.
எனவே உடனடியாக மோட்டாரை சரி செய்து சீரான குடிநீர் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மோட்டார் சரி செய்யப்பட்டு 20 நாட்களுக்குப் பிறகு குடிநீர் வினியோகம்செய்யப்பட்டது. இதனால்மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.