ADDED : மே 18, 2024 04:18 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப். 19ல் முடிந்த நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள வி.எஸ்.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தாலுகா, ஆயுதப்படை போலீசார், மத்திய ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகிய 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் அங்கு எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சி.சி.டி.வி., கேமராக்களையும் பார்வையிட்டு, மேலும் பணியில் இருந்து வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
