ADDED : செப் 13, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார் ஆகிய வருவாய் கோட்டங்களில் இம்மாதம் செப். 17ல் மிலாடி நபி அரசு விடுமுறை நாளாக இருப்பதால், செப்.24 காலை 11.00 மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் அந்தந்த அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன், விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்றார்.

