ADDED : ஜூலை 25, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மாணவர் நலன் சேவை மையம், பெண்கள்மேம்பாட்டு அமைப்பு சார்பில் வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி கல்லுாரிமுதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள் ஞான பிரபா,பிரியதர்ஷினி, கல்பனா, சமூக நலன், மகளிர் மேம்பாட்டு அமைப்பு நிர்வாகி ஷீலா சுந்தரி பேசினர்.
பேராசிரியர் சுகந்த மீனா, ஒருங்கிணைப்பாளர் மீனா உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாணவர் நல சேவை மைய டீன் நிர்மல்குமார், கூடுதல் டீன் பாண்டியராஜன் செய்தனர்.பேராசிரியர் ஜோதிஸ்வரி நன்றி கூறினார்.

