நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக் குழு மாநில பொது குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் உமாபதி வரவேற்றார்.
மாநில தலைவர் நந்தகுமார், செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ரவி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.