ADDED : ஜூன் 14, 2026 11:00 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் குடும்பத்துடன் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
இந்த பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. 1978 முதல் 1985 ஆண்டு வரை, படித்த மாணவர்கள் குடும்பத்துடன் சந்தித்துக் கொண்டனர். ஒருவர் ஒருவர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது விளையாட்டு போட்டி பாட்டு போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட தலைமை நீதிபதி பத்மநாபன், ராஜபாளையம் ஆர்.டி.ஓ., கண்ணன், டாக்டர் வீரராஜன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
----
