ADDED : ஆக 12, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மாணவர் சேவை மையம் சார்பில் மாநில அளவிலான நவீன தொழில் நுட்ப விழா போட்டிகள் கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது. இதில் கணினி அறிவியல் துறைத் தலைவர் கதிர்வளவக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மல் குமார், பாண்டியராஜன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல், வினாடிவினா, மென்பொருள் உருவாக்குதல், இணையதள பக்கம், மீம் உருவாக்குதல், குறும்படம் உள்பட 10 போட்டிகள் நடந்தது. விருதுநகர் டி.சி.இ., நிறுவன செயல் அதிகாரி விஜயவேல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் பிரேம் சங்கர் நன்றி கூறினார்.