/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெட்டிக் கடையில் பொருட்கள் திருட்டு
/
பெட்டிக் கடையில் பொருட்கள் திருட்டு
ADDED : மே 22, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை செம்பட்டி என்.ஜி.ஓ., காலனி சேர்ந்தவர் பாண்டியன், 49, இவர் தன் வீட்டின் அருகே பெட்டி கடை நடத்தி வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் கதவை மூடியும், பெட்டிக்கடையின் கதவை பூட்டு போடாமலும் மூடிவிட்டு குடும்பத்துடன் திண்டுக்கல் சென்று விட்டார்.
இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கடையிலிருந்த வெண்கல பிள்ளையார் சிலை, லேப்டாப், ஸ்மார்ட் போன், வெள்ளி பொருட்கள் ரூ. 27 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

