ADDED : ஆக 21, 2024 06:42 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் மத்திய அரசின் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் அனைத்து ஊடகத்துறையினருக்கும் நலத்திட்டங்கள், பெண்களுக்கான சட்டங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு, பயிற்சி கூட்டத்தில் சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி தலைமை வகித்து பேசினார்.
இதில் வழக்கறிஞர் ராஜா விசாகா கமிட்டி, புதிய குற்றவியல் சட்டங்கள், போக்சோ, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து எடுத்துரைத்தார்.
