ADDED : ஆக 01, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
தொழிலாளி பலி
சேத்துார் : தளவாய்புரம் அடுத்த ஜமீன் கொல்லங்கொண்டானை சேர்ந்தவர் ராஜலிங்கம் 70, கட்டட தொழிலாளி.
ராஜபாளையத்தில் வேலை முடிந்து டூ வீலரில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அயன்கொல்லங்கொண்டான் கண்மாய் பெரிய பாலம் அருகே ஹோட்டல் அருகே பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதியதில் உயிரிழந்தார். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
