sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாவட்டத்தில் ஒரே நாளில் 335 மி.மீ., மழைப் பொழிவு

/

மாவட்டத்தில் ஒரே நாளில் 335 மி.மீ., மழைப் பொழிவு

மாவட்டத்தில் ஒரே நாளில் 335 மி.மீ., மழைப் பொழிவு

மாவட்டத்தில் ஒரே நாளில் 335 மி.மீ., மழைப் பொழிவு


ADDED : ஏப் 08, 2025 05:48 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 335 மி.மீ., அளவிற்கு சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

கடந்த ஒருவாரமாக வளிமண்டல சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் வாட்டினாலும் மாலையில் கருமேகம் சூழ்ந்து மழை பொழிகிறது.

ஏப். 2, 3ல் மொத்தம் 337.1 மி.மீ., மழை பெய்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு மேல் இடி, மின்னல், பலத்தக் காற்றுடன் 335.40 மி.மீ., மழை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்தது. சூறைக் காற்றால் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது. திருச்சுழியில் ரோட்டில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக காரியாபட்டி 64.20 மி.மீ., சிவகாசி 46.80 மி.மீ., கோவிலங்குளம் 45.40 மி.மீ., ஸ்ரீவில்லிப்புத்துார் 42.10 மி.மீ., விருதுநகர் 41.20 மி.மீ., சாத்துார் 32 மி.மீ., அருப்புக்கோட்டை 19 மி.மீ., வத்திராயிருப்பு 17 மி.மீ., பெரியாறு பிளவக்கல் 14.20 மி.மீ., வெம்பக்கோட்டை 9.50 மி.மீ., ராஜபாளையம் 4 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக 27.95 மி.மீ., மழை பதிவானது.






      Dinamalar
      Follow us