/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் 42 கிலோ டீ துாள் பறிமுதல்
/
அருப்புக்கோட்டையில் 42 கிலோ டீ துாள் பறிமுதல்
ADDED : ஆக 03, 2025 04:52 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே டீ கடையில் 5 கிலோ புகையிலை பொருட்கள் பந்தல்குடியில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த 42 கிலோ டீ தூள் ஆகியவற்றை மாவட்ட நியமன அலுவலர் பறிமுதல் செய்தார்.
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர், அலுவலர்கள் அருப்புக்கோட்டை - தூத்துக்குடி நான்கு வழி சாலை ஓர கடைகளை ஆய்வு செய்தனர். 5.2 கிலோ குட்கா, பந்தல்குடியில் சூர நாயக்கன்பட்டி தெருவில் கேரளாவில் இருந்து பொட்டலமாக கொண்டு வரப்பட்ட 42 கிலோ டீ தூள் பறிமுதல் செய்து கலப்படமாக இருக்கும் என்ற சந்தேகத்தில் பறிமுதல் செய்து உணவு மாதிரி ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.