ADDED : ஏப் 13, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 2008 பேர், மாற்றுத்திறனாளிகள் 1845 பேர் தபால் ஓட்டு அளிக்க விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.
இவர்களிடம் ஓட்டுக்களை சேகரிக்க மொத்தம் 49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் இன்று முதல் ஏப்.17 வரை அவர்களின் வீடுகளுக்கே சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.
