ADDED : அக் 26, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் மேலச்சிறு குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (எ) ராசு, 42.திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.
தாய் தந்தை இறந்து விட்ட நிலையில் அங்குள்ள மடத்தில் தங்கி இருந்தார். அக்.24ல் மாலை 4:00 மணிக்கு கிராமத்தில் உள்ள கண்மாய் தண்ணீரில் அவர் உடல் மிதந்தது. தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

