sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருத்தங்கலில் ரூ.30 லட்சத்தில் கட்டியும் பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்

/

திருத்தங்கலில் ரூ.30 லட்சத்தில் கட்டியும் பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்

திருத்தங்கலில் ரூ.30 லட்சத்தில் கட்டியும் பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்

திருத்தங்கலில் ரூ.30 லட்சத்தில் கட்டியும் பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்


ADDED : ஏப் 11, 2025 04:27 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: திருத்தங்கல் கவிதா நகரில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டும் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

திருத்தங்கல் கவிதா நகரில் பட்டாசு தொழிலாளர்கள், கூலித் தொழிலாளிகள், அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வீட்டு திருமணம் காதுகுத்து உள்ளிட்ட விசேஷங்களை நடத்துவதற்கு மண்டபம் இல்லாமல் சிரமப்பட்டனர். எனவே எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.

இதனால் இப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கட்டப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் சமுதாயக்கூடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. கட்டடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இப்பகுதி மக்கள் வேறு வழியின்றி அதிக வாடகை கொடுத்து தனியார் மண்டபங்களில் விசேஷங்களை நடத்துகின்றனர்.

கட்டடம் சேதம் அடைந்து பயனற்றதாக மாறிவிடுவதற்கு முன்பு மின்சாரம், தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us