sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விஸ்வநத்தத்தில் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள்

/

விஸ்வநத்தத்தில் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள்

விஸ்வநத்தத்தில் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள்

விஸ்வநத்தத்தில் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள்


ADDED : ஜூன் 23, 2025 05:43 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் இரவில் நடுரோட்டில் திரியும் மாடுகளால் டூவீலர்களில் செல்பவர்கள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர்.

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் மாடுகளை வளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரத்தில் மட்டும் பிடித்துச் சென்று விட்டு மீண்டும் ரோட்டிலேயே விட்டு விடுகின்றனர். விஸ்வநத்தம் ரோட்டில் எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும்.

இப்பகுதியில் மாடுகள் இரவு நேரத்தில் நடு ரோட்டில் மாடுகள் நடமாடுகின்றன. தவிர ஒரு சில மாடுகள் ரோட்டிலேயே படுத்து விடுகின்றன. இதனால் எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை.

இரவில் டூவீலரில் செல்பவர்கள் மாடுகளால் தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் ஒலி எழுப்புகையில் மாடுகள் மிரண்டு ஓடும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

சமீபத்தில் இங்கு இரவு எட்டு மணிக்கு டூ வீலரில் வந்த இருவர் மாடுகள் குறுக்கே வந்ததில் கீழே விழுந்து காயமடைந்தனர். எனவே உடனடியாக இப்பகுதியில் ரோட்டில் நடமாடும் மாடுகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us