sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

/

நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்


ADDED : அக் 04, 2024 04:19 AM

Google News

ADDED : அக் 04, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: மாவட்டம் முழுவதும் நாய்கள் தொல்லை தான் பெரும் பிரச்சனையாக உள்ளது நாயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் ஜெயசீலன் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை நகராட்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்.டி.ஓ., வள்ளிக் கண்ணு, நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, துணை தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜமாணிக்கம், தாசில்தார் செந்தில்வேல் மற்றும் பிற துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கவுன்சிலர்கள் கூறுகையில்,'' நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. டூ வீலரில் செல்பவர்களை விரட்டி கடிக்கிறது. நாய்களை கட்டுபடுத்த என்ன தான் வழி. தும்பைகுளம் கண்மாயை தூர் வாரி பராமரிக்க வேண்டும். மழை காலத்தில் கண்மாய் தண்ணீர் தெருக்களில் வந்து விடுகிறது. விருதுநகர் ரோடு, பாவடி தோப்பு பகுதியில் உள்ள மெயின் ஓடை தூர் வார வேண்டும். கண்மாயின் நீர்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

நகராட்சி மயானத்தில் நினைவு சின்னம் கட்டுவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. தெற்கு தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இவற்றை அகற்ற வேண்டும்.

கலெக்டர் ஜெயசீலன் கூறுகையில்,'' மாவட்டத்தில் பெரிய பிரச்சனையே நாய்கள் தொல்லைகள் தான். கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு தேதியை அறிவித்து ஆக்கிரமிப்புக்களை ஏற்பாடு செய்யப்படும்.






      Dinamalar
      Follow us