ADDED : மே 14, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்; கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
அமெரிக்கா சிங்கப்பூர் துபாய், உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் இருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்து இணைய வெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.