ADDED : பிப் 18, 2024 12:32 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் தனலட்சுமி ரவி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சோழராஜா வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் விநாயகமூர்த்தி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி
நடந்தது. ஆசிரியர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.
