UPDATED : ஜூன் 30, 2026 04:57 PM
ADDED : ஜூன் 30, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்;ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார புனித வின்சென்ட் தே பவுல் சபை ஆண்டு விழா திரு இருதய சர்ச் வளாகத்தில் நடந்தது.
மத்திய சபை தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் பாதிரியார் முரளி ஆனந்த், மாணவர்களுக்கும், கோபாலபுரம் பகுதி தத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் மத்திய சபை செயலாளர் பரலோகம், பொருளாளர் மரிய பால்ராஜ், வட்டார சபை பொருளாளர் புனிதன், ராஜபாளையம், சுந்தர நாச்சியார்புரம், புதுப்பட்டி, கோபாலபுரம், நத்தம்பட்டி கிளைகளின் சபை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
