
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி; சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. அதிகாலையில் யாக பூஜை நிகழ்ச்சி முடிந்தவுடன் பால் குடம் எடுத்தல் நடந்தது.
செல்வ விநாயகர், துர்க்கை பரமேஸ்வரி அம்மன், வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆகிய சுவாமிகளுக்கு வருடாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது.
அலங்காரத்தில் அம்மன் பல்லக்கில் ரத வீதியில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.