sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரி  பஸ் -- லாரி மோதல் விபத்தில் மேலும் ஒருவர் பலி

/

கல்லுாரி  பஸ் -- லாரி மோதல் விபத்தில் மேலும் ஒருவர் பலி

கல்லுாரி  பஸ் -- லாரி மோதல் விபத்தில் மேலும் ஒருவர் பலி

கல்லுாரி  பஸ் -- லாரி மோதல் விபத்தில் மேலும் ஒருவர் பலி


ADDED : ஜூலை 10, 2025 02:20 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் தனியார் கல்லுாரி பஸ், மினி லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் தங்கமாரியப்பன் 37, சம்பவயிடத்திலேயே பலியானார். இதில் படுகாயமடைந்த பஸ் டிரைவர் ஸ்ரீனிவாசன் 58, நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் ஸ்ரீவில்லிப்புத்துாரில் தனியார் கல்லுாரியில் பஸ் டிரைவராக பணிபுரிகிறார்.

இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விருதுநகரில் இருந்து கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் என 35 பேரை ஏற்றிக்கொண்டு சிவகாசி ரோட்டில் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

விருதுநகரை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் தங்கமாரியப்பன், எம்.சாண்ட் லோடு ஏற்றிய மினி லாரியை செங்குன்றாபுரம் ரோடு பிரிவில் உள்ள கடையில் டீ குடிக்க நிறுத்தினார். டீ குடித்து விட்டு லாரியை எடுத்தார்.

அப்போது தனியார் கல்லுாரி பஸ் நேராக வந்து லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கமாரியப்பன் பலியானார். படுகாயமடைந்த பஸ் டிரைவர் ஸ்ரீனிவாசன் மதுரையில் தனியார் மருத்துவமனையில் நேற்று பலியானார். இந்த விபத்தில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 18 பேர் காயமடைந்தனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us