sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குண்டாற்றில் சீமைக் கருவேல மரங்கள் அகற்ற எதிர்பார்ப்பு

/

குண்டாற்றில் சீமைக் கருவேல மரங்கள் அகற்ற எதிர்பார்ப்பு

குண்டாற்றில் சீமைக் கருவேல மரங்கள் அகற்ற எதிர்பார்ப்பு

குண்டாற்றில் சீமைக் கருவேல மரங்கள் அகற்ற எதிர்பார்ப்பு


ADDED : செப் 21, 2024 05:06 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: குண்டாற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள், நாணல்களால் ஆறு இருக்கும் இடமே தெரியாமல் போனதால் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி, திருச்சுழி பகுதி மக்களின் நீர் ஆதாரமாக குண்டாறு, தெற்காறு இருந்து வருகிறது. சென்னம்பட்டி கால்வாய் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும், தடுப்பணை, வரத்து கால்வாய்கள் மூலம் திருச்சுழி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் நீர் பங்கிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்றில் கிடந்த மணல்கள் சுரண்டப்பட்டதால் பள்ளங்களாக உள்ளன. ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி ஆபத்தான நிலை இருந்து வருகிறது. தற்போது சீமைக் கருவேல மரங்கள், நாணல்கள் வளர்ந்து ஆறு இருக்கும் இடமே தெரியாமல் போனது. ஆற்றின் ஓரம் இருக்கக்கூடிய நிலங்களை ஒட்டி பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆற்றின் அகலம் குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தோணுகால், கரியனேந்தல் இடையே தடுப்பணை கட்டப்பட்ட பின், நீண்ட தூரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்னை தீர வாய்ப்பு உள்ளது. அதே சமயம் சீமைக் கருவேல மரங்கள், நாணல்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரின் தன்மை மாறி அசுத்தமாகி வருகிறது, பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள், நாணல்களை அப்புறப்படுத்தி, பள்ளங்களை சமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.






      Dinamalar
      Follow us